கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம்

08 Feb, 2025 | 04:04 PM
image

கடந்த ஒரு மாத காலமாக மின்சார வசதியின்றி  இருளில் மூழ்கியுள்ள விவசாய கிராமம் இந்நிலையிலும் காட்டு யானை அச்சுறுத்தலால் அக்கிராமத்திலிருந்தும் வெளியேற தாம் தயாராகி வருவதாக அங்குள்ள மட்டக்களப்பு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மட்டக்களப்பு  கிரான் பிரதேச செயலாளர் பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றியும், போக்குவரத்துக்குரிய பாதைகள் சேதமடைந்து காணப்படுவதுடன், காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தற்போது அப்பகுதியில் பெரும்போக வேளாண்மை அறுவடை மேற்கொண்டு வருவதன் காரணமாக விவசாயிகள் இரவு வேலைகளிலும் தங்களது பணிக்காக சென்று வரும் வேளை வெள்ள அனர்த்தத்தினால் சேதம் அடைந்த மின்சார கம்பங்கள் கடந்த ஒரு மாத காலமாக  திருத்தப் பணிகள் மேற்கொண்டு மின்சார வசதி வழமை நிலைக்கு கொண்டுவருவதங்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரைவில்லை எனவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இவற்றால் அங்குள்ள மக்களின்  அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஒரு மாத காலமாக உயிர் அச்சுறுத் துக்களுக்கு மத்தியில் இரவுப் பொதுதுகளை கழிக்க வேண்டி உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.

அங்குள்ள மக்கள் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு, மேட்டுநிலப் பயிர்செய்கை, போன்றவற்றை தமது வாழ்வாதார கொண்டுள்ள போதிலும் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடிவெட்டை, கானந்தனை, ஆகிய பகுதி கிராமமக்களே இவ்வாறு மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இதனால் அங்குள்ள மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகளும், விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அப்பகுதி மக்களுக்கு வழங்கும் மின்சாரத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் தொடர்பில் கேட்டறிவதற்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையுடன் தொலைபேசி மூலம் சனிக்கிழமை (08.02.2025) தொடர்பை ஏற்படுத்தியபோதும் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை. 

எனினும் மின்சார சபையின் திருகோணமலையில் அமைந்துள்ள காரியாலயத்திற்கு அழைப்பெடுத்தபோது சனிக்கிழமை (08)  மட்டக்களப்பு காரியாலயத்தில் யாரும் இருக்கமாட்டார்கள், மின்சார சபையின் மட்டக்களப்பு காரியாலயத்திற்குப் பொறுப்பான பொறியியலாளரின் தனிப்பட்ட தொடர்பு இலக்கம் தமக்குத் தெரியாது எனவும் தொலைபேசிக்குப் பதிலளித்த பெண் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25