மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கான பிரத்யேக தீப வழிபாடு..!

Published By: Digital Desk 2

08 Feb, 2025 | 11:08 AM
image

நாம் அனைவரும் உழைப்பது பணத்திற்காகத்தான். பணம் கிடைத்தால் மட்டும்தான் அதாவது ரூபாய் கிடைத்தால் மட்டும்தான் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்துவதற்கு வழிவகை செய்ய இயலும். 'அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை ' என செல்வத்தின் முக்கியத்துவத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இறை வழிபாட்டின் முதன்மையான இலக்கு என்பது செல்வ வளத்திற்காகத்தான் . செல்வம் எம்மிடத்தில் இருந்தால் அக மகிழ்ச்சியும் , ஆரோக்கியமும் அதிகமாகும். இதனால்தான் எம்மில் பெரும்பாலோர் செல்வ வளத்தை அருளும் மகாலட்சுமி வழிபாட்டை நாளாந்தம் தவறாமல் மேற்கொள்கிறார்கள். இந்தத் தருணத்தில் மகாலட்சுமியின் வழிபாட்டை சூட்சமமான முறையில் மேற்கொள்ளும் போது அவரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் நிரந்தரமாக எம்முடைய இல்லங்களில் தங்கி அருள் புரிவார் என்பது முன்னோர்களின் வாக்கு.

இதற்கு தேவையான பொருட்கள் : ஆறு மொச்சை பயிர், ஆறு ஒரு ரூபாய் நாணயம் , ஆறு டைமண்ட் கல்கண்டு, பசு நெய் , காமாட்சி விளக்கு , தாமரைத் தண்டு திரி.

வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரை என குறிப்பிடப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான தருணத்தில் உங்களுடைய பூஜை அறையில்,  பூஜை அறையை சுத்தம் செய்து காமாட்சி விளக்கிற்கு சந்தனம் குங்குமத்தால் பொட்டிட்டு, பசு நெய்யை ஊற்றி தாமரை தண்டு திரியை வைத்து  விளக்கேற்ற வேண்டும்.  இந்த விளக்கை ஏற்றுவதற்கு முன் விளக்கின் கீழ்ப்பகுதியில் ஒரு தட்டை வைத்து அந்த தட்டிற்குள் ஆறு மொச்சை பயிறு, ஆறு டைமண்ட் கல்கண்டு, ஆறு ஒரு ரூபாய் நாணயங்கள் இந்த மூன்றையும் வைத்துவிட்டு அதன் மேல் விளக்கை வைக்க வேண்டும். இதன்பிறகு குன்றா செல்வம் குன்று போல் வீட்டில் பொங்க வேண்டும் என மனதுள் மகாலட்சுமியை நினைத்து பிரார்த்திக்க வேண்டும். இப்படி சூட்சமமான முறையில் விளக்கேற்றி மகாலட்சுமியை ஆறு வாரங்கள் வரை வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விளக்கேற்றி வணங்கி வந்தால் உங்களுடைய தன வரவு அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.

இதுபோன்ற விளக்கினை ஏற்றி வழிபடும்போது வாரா கடன் வசூலாவதையும், எப்போதோ கொடுத்துவிட்டு வராது என நினைத்திருந்த தொகையும் , நீதிமன்றத்தின் மூலம் நிலுவையில் இருந்த தொகையும்,  தாமதமாக கிடைக்கும் என்று கருதிய தொகையும் உடனடியாக கிடைப்பதையும் அனுபவத்தில் கண்டு உணர்ந்து மகிழலாம். சிலருக்கு புதிய வாய்ப்புகள் மூலமாகவும், சிலருக்கு உப தொழில்கள் மூலமாகவும் கூடுதல் வருவாய்  கிடைப்பதையும் அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35