( எம்.நியூட்டன்)
2025 யாழ் ரத்னா விருதிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதுடன் தகுதியானவர்கள் ஆவணங்களை விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளரும் கலாசாரப்பேரவையின் தலைவருமான எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பிரதேச கலாசாரப்பேரவையினால் கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்கு வழங்கப்படுகின்ற விருதாகிய யாழ் ரத்னா விருதுக்கு கவிதை, சிறுகதை, நாவல், நடனம், ஓவியம், சிற்பம், நாடகம், குறும்படத்துறை, இசைநாடகம், இசை (வாய்ப்பாட்டிசை, பண்ணிசை, இசையமைப்பு ) வாத்தியக்கலை (தவில், நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருதங்கம்,வயலின், வீணை, ஓர்கள், ஆர்மோனியம், போன்றன) கூத்து (வடமோடி, தென்மோடி, சிந்துநடை) கிராமியக்கலைகள் (கரகம், காவடி கும்மி, கோலாட்டம். வசந்தன் கூத்து, வில்லுப்பாட்டு மொம்மலாட்டம், ஒயிலாட்டம், மகுடி போன்ற தொடர்புடைய கலைகள்) இசைக்கலை (வாய்ப்பாட்டு, பண்ணிசை, இசையமைப்பு) ஒப்பனைக்கலை (நாடகங்கள்,சுத்துக்கள், நடனக்கலைத்துறைகளுக்கானவை) வாத்தியங்கள் உருவாக்கம் ஆகிய துறைகளில் யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் கலைப்பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தினைக் கொண்ட 60வயது பூர்த்தியடைந்தவர்களும் இதுவரை இவ்விருதினை பெற்றுக்கொள்ளாதவர்களும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப்படிவங்களை யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப்பிரிவில் பெற்று பூரணப்படுத்திய விண்ணப்பத்துடன் உரிய கலைத்துறையினை சான்றுப்படுத்தும் ஆவணப்பிரதிகளுடன் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM