மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதி உரிய முறையில் சீரமைக்கப்படவில்லை - மக்கள் விசனம்

07 Feb, 2025 | 08:27 PM
image

மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

முன்னதாக  அவ்வீதியை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், புகையிரத பயணங்களுக்காக செல்லும் பொதுமக்கள் உட்பட சாந்திபுரம், சௌத்பார் முதலான பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாமல் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் வீதி சீரமைப்புப் பணிகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக, வீதிகளில் பள்ளங்களை நிரப்பும் பணிகள் கூட நேர்த்தியாக இடம்பெறவில்லை எனவும் அந்த பணிகளும் நீண்டகால பாவனைக்கு உகந்ததாக அமையாமல் வீதிகள் சேதமடைந்துள்ளதாகவும் சாந்திபுரம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையானது பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில், அரசாங்க பணத்தை வீணாக்கி வருகிறது. எனவே, அரசு ஒதுக்கும் நிதியை வீணாக்காமல் வீதியை முழுமையாக புனரமைத்துத் தருமாறு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33
news-image

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு 

2026-04-22 17:25:26