சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் சீத கங்குள ஓயாவிலிருந்து வியாழக்கிழமை (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
பசறை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் குழுவுடன் சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.
பின்னர், அவர் தனது மனைவியுடன் சீத கங்குள ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது, அப்பகுதியில் ஏராளமான பெண்கள் நீராடிக்கொண்டிருந்ததால் , அவர் தனது மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, வேறு ஒரு பகுதிக்கு நீராடிச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தனது கணவன் திரும்பி வராததால், மனைவி இது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் அவரது சடலத்தை சீத கங்குள ஓயாவிலிருந்து மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM