சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றவர் சடலமாக மீட்பு!

06 Feb, 2025 | 04:42 PM
image

சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் சீத கங்குள ஓயாவிலிருந்து வியாழக்கிழமை (06)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

பசறை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் குழுவுடன் சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.

பின்னர், அவர்  தனது மனைவியுடன்  சீத கங்குள ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது, அப்பகுதியில் ஏராளமான பெண்கள் நீராடிக்கொண்டிருந்ததால் , அவர் தனது மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, வேறு ஒரு பகுதிக்கு  நீராடிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் தனது கணவன் திரும்பி வராததால், மனைவி இது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் அவரது சடலத்தை  சீத கங்குள ஓயாவிலிருந்து மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47
news-image

வடக்கு அபிவிருத்திக்கு வனவளத் திணைக்களம் மற்றும்...

2025-03-25 22:03:43
news-image

யாழ் . மாநகர சபை வேட்புமனு...

2025-03-25 21:58:53
news-image

பிரித்தானியா தடை : அரசாங்கத்தின் நிலைப்பாட்டை...

2025-03-25 21:35:53
news-image

எத்தடை வரினும் யாழ்.மாவட்டத்துக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-03-25 21:31:52
news-image

முன்னாள் இராணுவத் தளபதிகள், முன்னாள் கடற்படை...

2025-03-25 16:59:15
news-image

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு...

2025-03-25 21:07:45
news-image

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-03-25 21:06:25