விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ; உண்மைக்கு புறம்பான செய்தி - கலாநிதி சமித் நாணயக்கார

Published By: Digital Desk 7

06 Feb, 2025 | 01:33 PM
image

(நா.தனுஜா)

நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கான கருத்தடைக்கு முன்னரான தடுப்பூசி வழங்கலின் ஊடாக விசர்நாய்க்கடி நோயினால் (ரேபிஸ்) மனிதர்கள் மத்தியில் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்திருப்பதாக விலங்குகள் நலன் கூட்டிணைவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி சமித் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

விசர்நாய்க்கடி மற்றும் தெருநாய்க்கடி போன்றவற்றால் பெரும் எண்ணிக்கையானோர் பாதிக்கப்படுவதாகக் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் பின்னணியில், இதன் உண்மைத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கும் சமித் நாணயக்கார,

'அண்மையில் நாய்க்கடியின் விளைவாக 6500 பேர் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியொன்று வெளியாகியிருந்தது. இருப்பினும் இவ்வாறான சம்பவங்களில் 90 சதவீதமானவை வீட்டில் வளர்க்கப்படும் நாய்களினாலேயே இடம்பெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெருநாய்களால் தாம் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாகவும், எனவே இவ்விடயத்துக்கு மாவட்ட மட்டத்திலேயே தீர்வுகாணவிருப்பதாகவும் குறித்தவொரு மாவட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையினால் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் உரியவாறு ஆராயாமல், பொருத்தமற்ற உடனடித் தீர்மானங்களை எடுத்துவிடுவார்களோ என்றும், அதன்விளைவாகப் பெரும் பாதிப்பு ஏற்படுமோ என்றும் நாம் அஞ்சுகிறோம்.

2007 ஆம் ஆண்டு நாய்க்கடியினால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும் 2024 இல் நாய்க்கடியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆகக் குறைவடைந்திருக்கிறது.

அதேவேளை நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிடுவதாகவும் செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. ஆனால் உண்மையில் 2007 ஆம் ஆண்டிலும், 2024 ஆம் ஆண்டிலும் அதற்கு ஏற்பட்டிருக்கும் செலவு 600 மில்லியன் ரூபா மாத்திரமேயாகும்.

ஆனால் அக்காலப்பகுதியில் 150 ரூபாவாக இருந்த டொலர் ஒன்றின் பெறுமதி இப்போது 300 ரூபா வரை உயர்வடைந்திருக்கிறது. மருந்துப்பொருட்களின் விலைகள் முன்னரை விடவும் இரு மடங்கினால் அதிகரித்திருக்கின்றன. தற்போதைய தரவுகளின் பிரகாரம் 60 சதவீதமான நாய்களுக்குக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், 80 சதவீதமான நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் எமது சகல முயற்சிகளையும் பயனற்றுப்போகச்செய்யும் விதமாக சமூகப்பொறுப்பற்ற பலர் தாம் வீட்டில் வளர்க்கும் நாய்களைத் தெருவில் விட்டுச்செல்கிறார்கள். எனவே தற்போது நடைமுறையிலிருக்கும் ரேபிஸ் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதன் ஊடாகவும், விலங்குகள் நலன்பேண் சட்டமூலத்தின் ஊடாகவுமே தீவிர கரிசனைக்குரிய இந்நெருக்கடிக்கு உரியவாறு தீர்வுகாணமுடியும்' எனவும் கலாநிதி சமித் நாயணக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விசர்நாய்க்கடி நோய் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு எட்டப்படாமைக்கு போதிய எண்ணிக்கையான மிருக வைத்தியர்கள் இன்மையே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள விலங்கு நல செயற்பாட்டாளர் சம்பா பெர்னாண்டோ, ஆகவே இச்செயற்திட்டம் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2025-03-21 13:00:45
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது...

2025-03-21 13:10:21
news-image

நாட்டை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் ஐ.எம்.எப். உடன்படிக்கைகளுக்கு...

2025-03-21 13:09:27
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம் ;...

2025-03-21 11:57:00
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-21 12:22:02
news-image

உரிமைகளிற்கான எங்களின் போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்தவேண்டாம்...

2025-03-21 12:24:26
news-image

2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு...

2025-03-21 11:53:19
news-image

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்களை வழங்க ஜப்பான்...

2025-03-21 12:22:41