நினைத்த காரியத்தை நடத்தி தரும் தேங்காய்...!!?

Published By: Digital Desk 7

05 Feb, 2025 | 11:15 PM
image

எம்மில் பலரும் தங்களுடைய இலட்சியத்தை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பார்கள் லட்சியம் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். சிலருக்கு அவர்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆனால் பலரும் தங்களுடைய நினைத்த காரியத்தை நடத்த கடுமையாக போராடிக் கொண்டிருப்பார்கள். வழிமுறையை தெரிந்திருந்தாலும் சூட்சமத்தைப் புரிந்து கொண்டிருந்தாலும் அதனை பயன்படுத்தி, நினைத்ததை நடத்திக் கொள்ள இயலாத சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும்.‌ வேறு சிலருக்கு நல்ல நோக்கத்திற்காக சிலவற்றை செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால் அவர்களால் சிறு அடியை கூட எடுத்து வைக்க முடியாது. அவர்களுக்கு மன தடையும், மாயத்தடையும் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். இவர்கள் அனைவருக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நினைத்த காரியத்தை செயல்படுத்த எளிமையான வழிமுறை ஒன்றை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : தேங்காய்- நெய் -இரட்டை திரி.

நீங்கள் பிறந்த கிழமையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அன்று காலையில் நீராடி குலதெய்வத்தை மனதில் தியானித்து பூஜை அறையில் தேங்காயை சமமாக உடைத்து, அதன் இரண்டு பக்கத்திலும் நான்கு பாகமாக சமமாக கணக்கிட்டு, குங்குமம் இட்டு, அதில் இரட்டை திரியை வைத்து நெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

இந்த தேங்காய் மூடிகளை பித்தளையாலான தாம்பாளத் தட்டில் வாழை இலையை வைத்து, அதன் மீது பச்சரிசியை பரப்பி அதன் மேல் இந்த இரண்டு நெய் தேங்காய் தீபத்தையும் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.

தேங்காய் சமமாக உடைக்கப்படவேண்டும். சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். கண் உள்ள பகுதி உங்களுடைய பூஜை அறையில் உள்ள கடவுளின் உருவப்படத்திற்கு வலது புறமும், மற்றொரு தேங்காய் மூடியை இடது புறமும் வைத்து இறைவனின் பிரார்த்திக்க வேண்டும். 

தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் இத்தகைய தேங்காய் நெய் தீபத்தை ஏற்றி வழிபட தொடங்கினால் உங்களுடைய காரியம் அதாவது நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றி பெறுவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண வரவை அதிகரிக்கச் செய்யும் மூலிகைகள்

2025-03-25 15:50:45
news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57