சம்மாந்துறையில் கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது

05 Feb, 2025 | 01:01 PM
image

இரு வேறு பகுதிகளின் கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் சம்மாந்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மலையடிக்கிராமம் 01 பகுதியில் கடந்த பெப்ரவரி  03 ம் திகதி வீடு உடைக்கப்பட்டு தொலைபேசி உட்பட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். 

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு  புலனாய்வு மற்றும் தேடுதல் மேற்கொண்ட போது  இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இவ்வாறு கைதான வீரமுனை மற்றும் மலையடிக் கிராமம் பகுதிகளை சேர்ந்த இரு  சந்தேக நபர்கள் வசமிருந்த இரண்டு  தொலைபேசிகளை  பொலிஸார் கைப்பற்றினர்.  

அத்துடன்  கடந்த ஜனவரி  26ம்  திகதி  மையவாடி பகுதியில் வயதான பெண்மணியின் வீட்டில் உள்நுழைந்து  நகை மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன்   கைதான  சந்தேக நபர்கள்  தொடர்புள்ளமை பொலிஸாரின்  மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அத்துடன்  பாதிக்கப்பட்ட  வயதான பெண்ணும்  நேற்று செவ்வாய்க்கிழமை  (04)  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தனது வீட்டில் கடந்த ஜனவரி 26ம் திகதி  இரவு வேளையில் நகை மற்றும் கையடக்க தொலைபேசிகள் திருடிச் செல்லப்பட்டிருந்ததாக  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து மேற்குறித்த 2  சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போது மற்றுமொரு சந்தேக நபரான  பாண்டிருப்பு 02 பகுதியைச் சேர்ந்தவர் கைதானார். 

அத்துடன் சந்தேக நபர்கள் வசம்  கொள்ளையடித்த நகைகளையும் மீட்ட  சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46