யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

Published By: Rajeeban

05 Feb, 2025 | 09:43 AM
image

சர்வதேச அளவில் யுஎஸ்எயிட் அமைப்பு நேரடியாக பணிக்கு அமர்த்திய அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் யுஎஸ்எயிட்டிற்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை மீள அழைக்கப்போவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழாம் திகதி முதல் யுஎஸ்எயிட் பணிக்கு அமர்த்திய அனைவரும் நிர்வாகவிடுப்பில் வைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு யுஎஸ்எயிட்டின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நெருக்கடியா சூழலில் செயற்படுவதற்கு அவசியமானவர்கள்,முக்கிய தலைவர்கள்,சிறப்பாக நியமிக்கப்பட்ட திட்டங்களிற்கு பொறுப்பானவர்களிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக யுஎஸ்எயிட்டின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

யுஎஸ்எயிட்டிற்காக பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களில் பெருமளவானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர்.

உலகின் 60நாடுகளில் யுஎஸ்எயிட்டின் அலுவலகங்கள் உள்ளன.

வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களிற்கான திட்டமொன்றை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள இணையதளம், அவர்கள் அமெரிக்காவிற்கு மீள பயணித்தமைக்கான செலவீனங்களை30 நாட்களிற்குள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிர்ச்சி நடவடிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான பணியாளர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு உதவி திட்டங்களிற்கு பொறுப்பான யுஎஸ்எயிட் திங்கட்கிழமை முதல் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது.

யுஎஸ்எயிட்டின் பணியாளர்களிற்கு அலுவலகத்தில் நுழைவதற்கும் கணிணிகளை பயன்படுத்துவதற்குமான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.யுஎஸ்எயிட்டின் செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட ஊழியர்கள் பலர் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

யுஎஸ்எயி;ட்டின் இயக்குநர் தானே என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிடடின் செயற்பாடுகள் அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கைக்கு ஏற்ற விதத்தில் அமைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வரலாற்றுரீதியாக அமெரிக்க காங்கிரஸிற்கும் வெள்ளை மாளிகைக்கும் பதிலளிக்காத ஒன்று என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அது ஒரு அமைப்பாகயிருந்தாலும் அது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்தே உத்தரவுகளை பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.ஆனால் யுஎஸ்எயிட் அதனை புறக்கணித்து தொண்டு என்பது அமெரிக்காவின் நலன்களில் இருந்து வேறுபட்டதாகயிருக்கவேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் வழங்குவது அமெரிக்க மக்களின் வரிப்பணத்தையே நாங்கள் ஒவ்வொரு டொலருக்கும் பதிலளிக்கவேண்டும் ஒவ்வொரு டொலரும் எங்கள் தேசிய நலனை அடிப்படையாக கொண்டது என்ற உத்தரவாதத்தை மக்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03