(செ.சுபதர்ஷனி)
நாட்டின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இன்று செவ்வாய்க்கிழமை (04) நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள 285 கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
நாட்டின் 77ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன், அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய தேர்வு செய்யப்பட்ட 285 கைதிகளுக்கு இந்த சிறப்பு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை 6 பெண்களும் 279 ஆண்களும் உள்ளடங்கலாக 285 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு அமையவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM