கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழாவின் கொடியேற்றம் இன்று 3 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி திருப்பலியின் பின்னர் இடம்பெற்றது.
நவநாள் வழிபாடுகள் இன்று மாலை 6 மணிக்கு தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை பெருவிழா மாலை 7 மணிக்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது.
13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திருவிழா திருப்பலிகள் அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியில் ஆலய பங்குத்தந்தை தலைமையிலும், அதிகாலை 5 மணிக்கு சிங்கள மொழியில் கொழும்பு மறை மாவட்ட அருட்தந்தை தலைமையிலும், காலை 6 மணிக்கு தமிழ் மொழியில் அருட்தந்தை ஆனந்த பெர்னாண்டோபுள்ளே தலைமையிலும், சிங்கள மொழியில் காலை 7 மணிக்கு புதிதாக குருப்பட்டம் பெற்ற புதிய குருக்கள் தலைமையிலும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
திருவிழா சிறப்புத் திருப்பலிகள் காலை 8 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட துணை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு மறை மாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகை தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் பேராயர் பியார் நியுக்யென் வான் டொட் ஆண்டகை தலைமையில் ஆங்கில மொழியிலும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு புனிதரின் திருச்சொரூப பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும். பவனியின் இறுதியில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM