கொள்ளுப்பிட்டியில் பிரித்தானிய பெண் திடீர் மரணம் ; விடுதியை தற்காலிகமாக மூட உத்தரவு

Published By: Digital Desk 3

03 Feb, 2025 | 02:21 PM
image

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பெண் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்தோடு, ஜேர்மன் தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த விடுதியை தற்காலிகமாக மூடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று திங்கட்கிழமை (03) நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அனுமதி வழங்கும் வரை மூடப்படும்  என விடுதி நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வருகை தந்தவுடன் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸார்  தெரிவித்தனர்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டடி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மூன்று வெளிநாட்டு பிரஜைகள் தங்கியிருந்தனர். இதன்போது, திடீரென சுகவீனமடைந்து மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 24 வயதுடைய பிரித்தானிய பெண்  உயிரிழந்துள்ளதோடு,  மற்றைய இருவரான ஜேர்மனிய தம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன...

2025-12-17 15:24:31
news-image

வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி...

2025-12-17 15:03:28
news-image

“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில்...

2025-12-17 12:38:35
news-image

மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை...

2025-12-17 14:58:54
news-image

காட்டு யானை மீது மோதி இரு...

2025-12-17 14:53:44
news-image

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க...

2025-12-17 15:19:50
news-image

கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க துப்பாக்கிச்...

2025-12-17 14:45:50
news-image

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் காலவகாசம் நீடிப்பு

2025-12-17 14:11:51
news-image

பியூமி ஹன்சமாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...

2025-12-17 13:53:48
news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா”...

2025-12-17 12:02:04
news-image

தெமட்டகொடை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது!

2025-12-17 11:47:18
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-12-17 12:53:31