இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட இஞ்சி மூடைகளுடன் நால்வர் கைது

02 Feb, 2025 | 11:28 AM
image

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இஞ்சி மூடைகளுடன் நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக இஞ்சி மூடைகளை கடத்திச் செல்வதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதனையடுத்து கற்பிட்டி சம்மட்டிவாடி கடற்கரைப் பகுதியிலிருந்து கொழும்பிற்கு லொறி மூலம் சந்தேக நபர்கள் இஞ்சி மூடைகளை கடத்திச் செல்ல முற்பட்டபோது கண்டக்குடா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக குறித்த லொறியினை மறித்து சோதனையில் ஈடுப்பட்டபோது இஞ்சி மூடைகள் பொலிஸாரால் கைப்பற்ப்பட்டன. 

இதன்போது 45 உரைகள் அடங்கிய 1839 கிலோகொராம் இஞ்சி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் மதிப்பு  90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளதாக  கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்  இவர்களிடமிருந்து இஞ்சி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியையும் உளவு பார்கச் சென்ற மோட்டார் சைக்கிளையும் கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் கைப்பற்றிய இஞ்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35