வெற்றி பெறவில்லை என்றாலும் அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும் என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்காக சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ள இரங்கலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான கோசத்தோடு பயணித்த மூத்த அரசியல் தலைவர் மாவை சோனாதிராஜா அவர்கள்.
இவர் 1970களிலிருந்து தமிழரின் உரிமைக்கான அரசியல் கோஷத்தோடு பயணித்தவர். இதற்காக ஆரம்ப காலத்தில் நீண்ட சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். பின்னாளில் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டு, அந்த அரசியலைத் தொடர்ந்தவர்.
அவருடைய அரசியல் காலமானது நெருக்கடிகளும் ஏற்ற இறக்கமும் கொண்டதாக இருந்தது. ஆயினும் அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்து நின்று, தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.
அவர் விரும்பி முன்னெடுத்த அரசியல் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்த அரசியல் பயணத்தில் மாவை சேனாதிராஜா என்ற பாத்திரத்தின் பங்களிப்பு வரலாற்று அடையாளமாக என்றுமிருக்கும்.
அந்த வகையில் மூத்த அரசியல் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு சமத்துவக் கட்சி தனது அஞ்சலியை செலுத்தி நிற்கிறது என சமத்துவ கட் சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM