19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகள்:  தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா, நடப்பு சம்பியன் இந்தியா எதிர் இங்கிலாந்து

Published By: Vishnu

30 Jan, 2025 | 10:51 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும இரண்டு அணிகளைத் தீர்மானிக்கும் அரை இறுதிப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன.

கோலாலம்பூர் பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் விளையாடவுள்ளன.

தொடர்ந்து நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியாவை இங்கிலாந்து எதிர்த்தாடவுள்ளது.

இந்த நான்கு அணிகளில் தென் ஆபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.  

ஆனால், முதலாம் குழுவுக்கான தனது கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் இலங்கையிடம் முற்றிலும் எதிர்பாராத விதமாக அவுஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது.

தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டியில் வெற்றிபெறுவதற்கு அனுகூலமான அணியாக தென் ஆபிரிக்கா திகழ்கின்ற போதிலும் அவுஸ்திரேலியா தலைகீழ் முடிவுவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தென் ஆபிரிக்கா விளையாடிய 5 போட்டிகளில்   (முதல் சுற்று மற்றும் சுப்பர் சிக்ஸ் சுற்று) நான்கில் வெற்றிபெற்றது. ஒரு போட்டி முழமையாக கைவிடப்பட்டது.

தென் ஆபிரிக்க துடுப்பாட்டத்தில் எவரும் பெரியளவில் பிரகாசிக்கவில்லை. ஏனெனில் அவர்களில் ஒருசிலரே துடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், சிறப்பான பந்துவீச்சே தென் ஆபிரிக்காவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியிருந்தது.

தென் ஆபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் சிமோன் லௌரென்ஸ் 4 போட்டிகளில் 66 ஓட்டங்களையும் ஜெம்மா போத்தா 52 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கேலா ரினெக் 9 விக்கெட்களையும் மோனா லிசா லெகோடி 6 விக்கெட்களையும் நிதாபிசெங் நினி 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை ஈட்டியதுடன் ஒரு தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலியவின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் பலம்வாய்ந்ததாக போட்டி முடிவுகளிலிருந்து தெரிகிறது.

அவுஸ்திரேலிய சார்பாக துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய கயோமே ப்றே 83 ஓட்டங்களையும் லூசி கேய் ஹெமில்டன் 71 ஓட்டங்களையும் கேட் மாரி பேலே 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஹஸ்ரத் கில் 8 விக்கெட்களையும் டேகான் வில்லியம்சன், எலினோர் லரோசா, கயோமே ப்றே ஆகியோர் தலா 7 விக்கெட்களையும், லில்லி பாசிங்வெய்ட் 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியா எதிர் இங்கிலாந்து

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை பலம்வாய்ந்த இந்தியா வெற்றிகொள்ளும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரண்டு துறைககளிலும் இந்தியா பலம்மிக்கதாக இருக்கிறது. முதல் சுற்றல் மிகக் குறைந்த எண்ணிக்கைளைக் கொண்ட போட்டிகளில் இலகுவாக வெற்றிபெற்ற இந்தியா, சுப்பர் சி;க்ஸ் சுற்றில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி கணிசமான மோத்த எண்ணக்கைகளைப் பெற்றது.

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் ட்ரிஷா கொங்காடி குவித்த முதலாவது சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தது.

இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் ட்ரிஷா கொங்காடி ஒரு ஆட்டம் இழக்காத சதம் உட்பட 230 ஓட்டங்களையும் குணாலன் கமலினி ஒரு அரைச் சதத்துடன் 71 ஓட்டங்களை யும்   பெற்றுள்ளனர். ஆறு துடுப்பாட்ட வீராங்கனைகளின் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேற்பட்டதாக இருப்பது இந்தியாவுக்கு பலம்சேர்ப்பதாக அமைகிறது.

பந்துவீச்சில் 5 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுடன் வைஷ்ணவி ஷர்மா 12 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். ஆயுஷி ஷுக்லா 10 விக்கெட்களையும் வி.ஜே. ஜோஷித்தா 6 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு சவாலாக விளங்குவர் என நம்பப்படுகிறது.

மறுபக்கத்தில் இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகள் கைவிடப்பபட்டன. இதன் காரணமாக அதன் வீராங்கனைகளுக்கு துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அதிகளவில் ஈடுபட முடியாமல்போனது. ஆனால், விளையாடப்பட்ட 3 போட்டிகளில் இங்கிலாந்து வீராங்கனைகள் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் டாவினா பெரின் ஓர் அரைச் சதத்துடன் 131 ஓட்டங்களையும் ஜெமிமா ஸ்பென்ஸ் 66 ஓட்டங்களையும் ட்ருடி ஜோன்சன் 60 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

பந்துவீச்சில் டில்லி கோர்டீன் கோல்மன் 7 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.  

இந்த இரண்டு அணிகளில் சகலதுறைகளிலும் இந்தியா பலம்வாய்ந்ததாக இருக்கின்றது. எனவே இந்தியாவை வெற்றிகொள்வதாக இருந்தால் இங்கிலாந்து அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிவரும்.

இந்த இரண்டு அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27