உயர்தரமான மருந்துகளை நியாயமான விலையில் வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது

Published By: Vishnu

30 Jan, 2025 | 02:52 AM
image

(செ.சுபதர்ஷனி)

உயர்தரமான மருந்துகளை இந்நாட்டு அரச வைத்தியசாலைகள், நியாயமான விலையில் சந்தை விற்பனைக்காகவும் வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் அண்மையில் இடம்பெற்ற, தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கான உயர்தரமான மருந்துகளை தொடர்ச்சியாக விநியோகிப்பதுடன், நியாயமான விலையில் சந்தை விற்பனைக்கு தேவையான மருந்துகளை விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவது தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டு குழுவின் முதன்மை பொறுப்பாகும். நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒரு குறிப்பிட்ட அளவு மருந்து வகைகள் தேசிய மருந்தக கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மீதமுள்ள மருந்து வகைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் மூலம் தனியார் மருந்தக நிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டியுள்ளன. நாட்டில் சில சந்தர்ப்பங்களில் மருந்து மாஃபியாக்களும் தமது கைவரிசையை காண்பித்துள்ளன. ஆகையால், தேசிய மருந்துகள் ஆலோசனைக் குழு மற்றும் மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டு குழுவில் சுகாதாரத் துறை மற்றும் தமது தொழில் தொடர்பான உரிய புரிந்துணர்வைக் கொண்ட அதிகாரிகளை நியமிப்பது அவசியம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும். தற்போது புதிதாக நியமனம் பெற்ற குழுவினரும் இவ்விடயங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் உரியவாறு அமுல்படுத்த கடந்த காலங்களில் இருந்த அதிகாரிகள் எவரும் முயற்சிக்கவில்லை.

ஆகையால் தற்போது நியமனம் பெற்றுள்ள புதிய குழுவினர் நாட்டு மக்களுக்கு உயர் தரமான மருந்துகளை வழங்குவதை, பொறுப்பேற்று புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். உயர்தரமான மருந்துகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03