(நெவில் அன்தனி)
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்து கடைசி அணியாக அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது.
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் சுற்றில் இரண்டாம் குழுவிலிருந்து முதலாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் நேற்றைய தினம் அரை இறுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தன.
இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான ஒரே ஒரு சுப்பர் சிக்ஸ் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்து நான்காவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
சரவாக், போர்னியோ கிரிக்கெட் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டியில் நியூஸிலாந்தை 6 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.
தென் ஆபிரிக்காவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரை இறுதிவரை முன்னேறியிருந்த நியூஸிலாந்து இந்த வருடம் சுப்பர் சிக்ஸ் சுற்றுடன் வெளியேறுகிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்றது.
எம்மா மெக்லியோட், கேட் ஏர்வின் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி முதலாவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
ஆனால், ஏனைய வீராங்கனைகள் அதனை அனுகூலமாக்கிக்கொள்ளத் தவறியது நியூஸிலாந்து அணிக்கு பாதகமாக அமைந்தது.
கேட் ஏர்வின் 35 ஓட்டங்களையும் எம்மா மெக்லியோட் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.
மேலும் நியூஸிலாந்தின் 10 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
பந்துவீச்சில் டில்லி கோர்ட்டீன் கோல்மன் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரிஷா தனவாலா 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ட்ருடி ஜொன்சன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து மகளிர் அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஜெமிமா ஸ்பென்ஸ் 29 ஓட்டங்களையும் டாவினா பெரின் 21 ஓட்டங்களையும் சார்ளட் ஸ்டப்ஸ் ஆட்டம் இழக்காமல் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரிஷிக்கா ஜஸ்வால் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM