கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி

Published By: Digital Desk 7

27 Jan, 2025 | 07:52 PM
image

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (26) கோட்டே அங்கம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டதுடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். 

மேலும் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகம்மன்பில உட்பட பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசு தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஊடக பிரதானிகளும் விசேட அதிதிகளாக  கலந்து கொண்டமையும் இதில் விசேட அம்சமாகும்.

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கமானது மூன்றாவது தடவையாகவும் இந்த சிநேகபூர்வ ஒன்றுகூடலையும் கிரிக்கெட் போட்டியையும் நடாத்துகின்றது.

அத்துடன் கொழும்பு  ஊடகவியலாளர்களின் நலன்புரி சேவைகளை மேம்படுத்தவே வருடாந்தம் இந்த நிகழ்வு நடத்தப்படுவதோடு இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

ஆரம்ப நிகழ்விற்கு வருகை தந்த பிரதமர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் ஆகியோர் கொழும்பு ஊடகவியலாளர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக தமது உரைகளில் தெரிவித்திருந்தார்கள் அத்தோடு ஏனைய விருந்தினர்களும் கொழும்பு ஊடகவியலாளர்களின் சேவையை பாராட்டி தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

தொடர்ந்து நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கொழும்பு ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

கோட்டே அங்கம்பிட்டிய விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சஞ்சீவ கால்லகே  தலைமையிலான கொழும்பு ரைடர்ஸ் அணி  வெற்றிபெற்றது.   

இரண்டாம் இடத்தை கொழும்பு ஈகிள்ஸ் அணி பெற்றுக் கொண்டது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரைடர்ஸ் அணி 3 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பெற்றது 

பதில் இன்னிங்ஸை விளையாடிய கொழும்பு ஈகிள்ஸ் அணியால் 22 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. அதன்படி கொழும்பு ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. 

இந்த சுற்றுப் போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக  நுவான் யசங்க தெரிவானதோடு பிரதீப் விக்ரமசிங்க சிறந்த துடுப்பாட்டக்காரராக தெரிவானார். மேலும் போட்டித் தொடரின் சிறந்த வீரராக உதித மகேஷ் தெரிவானார்.

பரிசளிப்பு வைபவத்தின் சிறப்பு விருந்தினராக  முன்னாள் பிரதி சபாநாயகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான திலங்க சுமதிபால கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்ததுடன், மேலும் பல சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் பரிசில்கள் வழங்கி சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23