கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூனாகலை வீதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தீயில் எரிந்த நிலையில் முதியவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
பூனாகலை, கொஸ்லாந்தை வீதியில் வசிக்கும் 70 வயது மதிக்கத்தக்க முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதியவர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், தினமும் இரவில் மண்ணெண்ணெயிலான குப்பி விளக்கை ஏற்றி வைத்து உறங்குவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் ஏற்றி வைத்திருந்த குப்பி விளக்கினால் வீடு முழுவதும் தீ பரவல் ஏற்பட்டு முதியவர் உயிரிழந்திருக்கலாம் என என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லாந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM