ஒன்லைன் ரயில் டிக்கெட் மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பிரதேச விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் ரயில் டிக்கெட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதுடன், அவரிடமிருந்து இரண்டு இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுகன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM