(நெவில் அன்தனி)
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் அரை இறுதிக்கு செல்லும் இலங்கையின் வாய்ப்பு இயற்கை அன்னையின் சீற்றத்தால் பறிபோனது.
இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியாவும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டன.
இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த முதலாம் குழுவுக்கான சுப்பர் சிக்ஸ் போட்டி சீரற்ற காலநிலையால் நாணய சுழற்சி நடத்தப்படாமலேயே முழமையாக கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சுப்பர் சிக்ஸ் சுற்றை முதலாம் குழுவில் 2 புள்ளிகளுடன் ஆரம்பித்த இலங்கை தற்போது 3 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. ஸ்கொட்லாந்து ஒரு புள்ளியுடன் 6ஆம் இடத்தில் இருக்கிறது.
சுப்பர் சிக்ஸ் சுற்றை தலா 4 புள்ளிகளுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இந்த சுற்றில் தத்தமது முதலாவது போட்டிகளில் வெற்றி பெற்றதால் தலா 6 புள்ளிகளைப் பெற்று அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டன.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற சுப்ப சிக்ஸ் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ப்றைஅனா ஹரிச்சரன் 17 ஓட்டங்களையும் சமாரா ராம்நாத் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் எலீனோர் லரோசா, காய்மி ப்றே, டேஜான் வில்லியம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் அணி 10.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் லூசி ஹெமில்டன் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷுக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியா 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் சார்பாக சுமய்யா அக்தர் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜன்னத்துள் மௌஆ 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்;மா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 7.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ட்ரிஷா கங்காடி 31 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் 40 ஓட்டங்களைக் குவித்தார்.
இப் போட்டி முடிவுகளை அடுத்து இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் தலா 6 புள்ளிகளைப் பெற்றுள்ளன. நிகர ஓட்ட வேக அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இக் குழுவில் இடம்பெறும் மற்றைய நான்கு அணிகளால் 6 புள்ளிகளைப் பெற முடியாது என்பதால் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM