மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் 50 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டார்.
கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டார்.
கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தான் வசிக்கும் வாடகை வீடொன்றில் அப்பெண் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்ததையடுத்து, மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில் மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கல்கிஸ்ஸை விஜய வீதியில் அமைந்துள்ள சந்தேக நபர் கூறிய வீட்டை சோதனையிட்டதில் 125 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, அது கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM