ஹெரோயினுடன் பெண் கைது !

Published By: Digital Desk 2

26 Jan, 2025 | 02:49 PM
image

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்புக்குளம் பகுதியில் 50 கிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் நேற்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டார்.

கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டார்.

கைதான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தான் வசிக்கும் வாடகை வீடொன்றில் அப்பெண் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்ததையடுத்து, மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலின் அடிப்படையில் மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கல்கிஸ்ஸை விஜய வீதியில் அமைந்துள்ள சந்தேக நபர் கூறிய வீட்டை சோதனையிட்டதில் 125 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, அது  கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை மற்றும் மன்னார் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57