ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹியங்கனை - கண்டி வீதியில் உள்ள உடுதஹ பகுதியில் கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 46 வயதுடைய அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவ்விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளதுடன் உதவியாளர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM