நல்லாட்சிக்கால இடைக்கால அறிக்கை கைவிடப்பட்டுள்ளது - கஜேந்திரகுமாரிடம் சி.வி.கே தெரிவிப்பு

26 Jan, 2025 | 02:31 PM
image

ஆர்.ராம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடலை தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி உரையாடுவதற்கான உத்தியோகபூர்வமான அழைப்பிதழையும் பெற்றுக்கொண்டுள்ள சி.வி.கே.சிவஞானம் விரைவில் அதுகுறித்த சாதகமான முடிவினை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நல்லூரில் உள்ள சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்புக்கான தீர்வு விடயத்தல் பாராளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும் நாளைய தினம் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு உத்தியோகபூர்வமாக எழுத்துமூலமான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், 

எமது கட்சியைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகள் புதியவை அல்ல. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் எமது கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரனும் பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்கள். 

அந்த விடயம் சம்பந்தமாக மத்திய செயற்குழுவில் உரையாடப்பட்டது. அவர்களது முன்முயற்சிக்கு எதிராக நாங்கள் தீர்மானங்களை எடுக்கவில்லை. 

மாறாக, எமது கட்சியின் சார்பில் அந்த விடயத்தினை முன்னகர்த்துவதற்காக எழுவர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனக்கும், பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்துக்கும் எழுத்துமூலமான கடிதமொன்றை வழங்கியுள்ளார்கள். 

அந்த வகையில் இன்று  சத்தியலிங்கம், சிறிதரன், சுமந்திரன் ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அவர்களுன் பேச்சுக்களை நடத்துவதோடு ஏனையவர்களுடனும் பேச்சுக்களை நடத்தி எமது முடிவுகளை அறிவிக்கவுள்ளோம்.

2016-2018வரையிலான காலப்பகுதி ஆட்சியின்போது புதிய அரசியலமைப்புக்காக தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை குறித்து நாம் பேசவேண்டிய தேவையில்லை. அது ஏற்கனவே கைவிடப்பட்டுள்ளது.

 2021ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய அரசியலமைப்புக்கான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர்கள் குழுவிற்கு எமது கட்சி சமர்ப்பித்த அரசியலமைப்புக்கான வரைவு உள்ளது. 

அந்த வரைவினையும் இணைத்து, கஜேந்திரகுமாரின் கருத்துக்களையும் இணைத்துக்கொண்டு நாம் சுமூகமானதொரு நிலைப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

 அந்த வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பினை சாதகமாக பரிசீலிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13