இலங்கை வர ஆய்வுக் கப்பல்களுக்கு தடையில்லை; விரைவில் நிலையான மூலோபாய விதிமுறை - அரசாங்கம்

26 Jan, 2025 | 12:58 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு செயல்முறை கீழ் வருவதற்கு தடை எதுவும் இல்லை. எனினும் நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கான நடவடிக்கையினை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான சிறப்பு குழு முன்னெடுத்த வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் வரும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை கடந்த டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தடையை முந்தைய அரசாங்கம் விதித்திருந்தது. எவ்வாறாயினும் உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் ஏற்படக்கூடிய இராஜதந்திர நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பொதுவானதொரு மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.  

இதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேராத் தலைமையிலான சிறப்பு குழுவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இந்த குழுவின் பணியானது உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிப்பதாயின் மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு  நிலையான ஒரு செயல்பாட்டு செயல்முறையை அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக உருவாக்குவதாகும்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆய்வுக்கப்பல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை தற்போது காலாவதியாகியுள்ளது. எனவே புதிய விதிமுறை அறிமுகப்படுத்தும் வரை, உலக நாடுகளின் ஆய்வுக்கப்பல் வருகை குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு செயல்முறை விதிமுறையின் கீழ் வருவதற்கு தடையில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் தினைக்களத்தில்  கடந்த புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

எனினும் சீன ஆய்வுக்கப்பல்கள் வருவதை கண்டித்து இந்தியா இராஜதந்திர அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்து வந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் வரையில் சீன ஆய்வுக்கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்திய கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க ஆய்வுக்கப்பல்களுக்கு தற்காலிக தடையை விதித்திருந்துடன், அந்த தடை தற்போது காலாவதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28