கூட்டமொன்றில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 2

26 Jan, 2025 | 12:09 PM
image

திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெதங்கஹவத்தை ஆலயத்தில் நடைபெற்ற நல்லிணக்க சபை கூட்டத்துக்கு வந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திஹகொட பிரதேசத்தை சேர்ந்த 73 வயதானவர் ஆவார்.

திஹகொட பொலிஸ் நிலையத்தினால் நல்லிணக்க சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் நேற்று சனிக்கிழமை (25) நடைபெற்ற நல்லிணக்க சபை கூட்டத்துக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் காயமடைந்து, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை  திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23