திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெதங்கஹவத்தை ஆலயத்தில் நடைபெற்ற நல்லிணக்க சபை கூட்டத்துக்கு வந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திஹகொட பிரதேசத்தை சேர்ந்த 73 வயதானவர் ஆவார்.
திஹகொட பொலிஸ் நிலையத்தினால் நல்லிணக்க சபைக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் நேற்று சனிக்கிழமை (25) நடைபெற்ற நல்லிணக்க சபை கூட்டத்துக்கு இரு தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.
இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதில் ஒருவர் காயமடைந்து, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM