நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ; தேர்தல்கள் ஆணைக்குழு

25 Jan, 2025 | 07:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும். 

எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டு கோரப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கமைய புதிய வேட்புமனுவை கோருவதற்கான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து நீதிமன்றத்தில் 4 தரப்புக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கமையவே உள் ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்களின் பின்னர் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். சபாநாயகர் கையெழுத்திட்டதன் பின்னர் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன் பின்னரே தேர்தல் ஆணைக்குழுவால் அதற்குரிய தினத்தை தீர்மானிக்க முடியும். எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு கிட்டும் என்று நம்புகின்றோம்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 1064 வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியதால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு தேவையான நிதி தொடர்பான மதிப்பீட்டை திறைசேரிக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். 

அதற்கமைய வரவு - செலவு திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்பட்டு தேர்தலின் போது ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06