சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் மதுபோதையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், அஸ்வெத்தும பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அநுராதபுரம் - பாதெனிய வீதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த மோட்டார் சைக்கிள் அநுராதபுரம் பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டது என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளில், சந்தேக நபர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறைச்சாலை அதகாரிகளிடமிருந்து தபப்சி ்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராக பிடியாணைகள் பிறப்பிக்கப்டப்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM