புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவர் கைது

Published By: Vishnu

24 Jan, 2025 | 10:22 PM
image

புகையிரத ஆசனங்களை இணையத்தில் முன்பதிவு செய்து அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்ற புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளர் உட்பட மூவர் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34-44 வயதுடைய கண்டி,மாத்தளை மற்றும் உக்குவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை மொபிடெல் இணைந்து இணையதளத்தில்   புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்படும் கணினி முறைமையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட புகையிரத பயணச்சீட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவரும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அதன் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் மோசடியில் ஈடுபட்டுள்ள பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-02-09 11:09:50
news-image

டிக்கோயா சந்தியில் பஸ் - முச்சக்கரவண்டி...

2025-02-09 10:58:35
news-image

கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு,...

2025-02-09 10:35:23
news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12