APIITயின் ரோட்ராக்ட் கழகத்தின் 3ஆவது ஆண்டு தைத்திருநாள் கொண்டாட்டம்  

24 Jan, 2025 | 03:49 PM
image

APIITயின்  ரோட்ராக்ட் கழகம் தனது முதன்மைத் திட்டமான தைத்திருநாளை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெருமையுடன் நிறைவுசெய்து, கலாசாரத்தைக் கொண்டாடுவதற்கும் சமூகத்துக்கு சேவை செய்வதற்கும் அதன் பணியைத் தொடர்கிறது. 

ஒரு கலாசார கொண்டாட்டமாக தொடங்கிய இந்த முயற்சி கூட்டுறவு, சேவை மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பன்முக திட்டமாக உருவாகியுள்ளது.

கூட்டுறவு பொங்கல் : கட்டம் - 1

ஜனவரி 12, 2024 அன்று பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற முதல் கட்டமான கூட்டுறவுப் பொங்கல், ஒரு துடிப்பான கலாசார  கொண்டாட்டத்துக்காக பத்து ரோட்ராக்ட் கழகங்களை ஒன்றிணைத்தது. 

பங்கேற்பாளர்கள் நட்பு ரீதியான பொங்கல் சமையல் போட்டியில் ஈடுபட்டு, நுணுக்கமான கோலங்களை உருவாக்கி, வேடிக்கையாக விளையாடி மகிழ்ந்தனர். இந்த நாள் நட்புறவு மற்றும் கலாசார பெருமையை வளர்த்தது. 

பங்கேற்பாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த கோவில் நிர்வாகத்தினரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக கழகம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

கோவில் மறுபிறப்பு: கட்டம் -2

இரண்டாவது கட்டம், கோவில் மறுபிறப்பு, அமைதி மற்றும் சமூகம் கூடுவதற்கான மையமாக ஒரு கோவிலை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துகிறது. 

APIITயின் ரோட்ராக்ட் கிளப், நல்லிணக்கம் மற்றும் கலாசார ஒற்றுமையை வளர்ப்பதில் கோயிலின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தப் புதுப்பித்தலுக்கு ஆதரவாக நிதி திரட்டுகிறது. இந்த உன்னத நோக்கத்துக்கான பங்களிப்புகள் ஒரு வழிபாட்டு தலத்தை மட்டுமல்ல, ஒரு முக்கிய சமூக மையத்தையும் பாதுகாக்க உதவும்.

ஏபிஐஐடியின் ரோட்ராக்ட் கிளப் பற்றி...

பிராந்தியத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக, APIITஇன் ரோட்டாராக்ட்கழகம்தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை மேற்கொள்கிறது. "எல்லைகளுக்கு அப்பால் சேவை செய்" என்ற பொன்மொழியால் வழிநடத்தப்பட்டு, அதன் உறுப்பினர்கள் தலைமை, சேவை மற்றும் கலாச்சார முயற்சிகள் மூலம் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். தைத் திருநாள் அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் நிற்கிறது.

பண்பாடு, சமூகம் மற்றும் இரக்கத்தின் கொண்டாட்டமான தைத் திருநாளின் உணர்வைப் பரப்பவும், ஆலய மறுபிறப்புக்கு ஆதரவளிக்கவும் அனைவரையும் கிளப் அழைக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14
news-image

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர்களின்...

2025-02-08 23:32:46
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-07 19:48:31
news-image

அமிர்தலிங்கம் மங்கையர்க்கரசி நினைவு இல்லம் மற்றும்...

2025-02-07 21:16:39
news-image

ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவள விழா

2025-02-07 14:34:55
news-image

சதன்யன் அசோகனின் மிருதங்க அரங்கேற்றம்

2025-02-07 14:38:23