மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 7

24 Jan, 2025 | 10:42 AM
image

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கொழும்பு-புத்தளம் வீதியில் கட்டுவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) கொழும்பிலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து நுரைச்சோலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியின்  இடதுபுறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நபர்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார்   மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56