பாதுகாப்பு தரப்பின் அசமந்த போக்கே மன்னார் நீதிமன்ற வளாக துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் ; நானும் இலக்காக்கப்படலாம் - செல்வம் அடைக்கலநாதன்

Published By: Digital Desk 7

23 Jan, 2025 | 05:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே  இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய  முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2413/37 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் உட்பட பல கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 அரசாங்கத்தின் தூய்மையான  இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்தமை வரவேற்கத்தக்கது.. இது உள்ளூராட்சித் தேர்தலுக்கான யுக்தியாக அமைய கூடாது.

தூய்மையான இலக்கை நோக்கிய இலங்கை என்ற அடிப்படையில் பல விடயங்களை  மேற்கொள்வதன்  ஊடாக இதனை வெற்றிக்கொள்ள முடியும். வடக்கு மற்றும்  கிழக்கை பொறுத்த வரையில் முப்படையினரும் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளனர். தேவாலயங்கள், கோயில்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை திணைக்களங்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாததை போன்றே இருக்கின்றன. வன ஜீவராசிகள் திணைக்களம்,தொல்பொருள் திணைக்களம் ஆகியனவை தனி அரசாங்கங்கள் போன்றே செயற்படுகின்றது. அது பொதுமக்களின் காணிகளையும் விவசாயிகளின் காணிகளை அபகரிக்கின்றது.

அந்தக் காணிகளை விடுவிப்பதன் ஊடாகவே தூய்மையான இலங்கை திட்டத்தை வெற்றிப்பெற முடியும். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள்  செல்வந்தர்களல்ல அவர்கள்  ஏழ்மை நிலைமையிலேயே   வாழ்கின்றனர். அவர்களின்   பொருளாதாரத்தை  மேம்படுத்தும் வகையில்  நெல்லுக்கான உத்தரவாத  விலையை  நிர்ணயம் செய்ய வேண்டும். அத்துடன் அவர்களின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வேண்டும்.

இதேவேளை ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும்,  திணைக்களங்கள் தொடர்பிலும் அவதானம் இருக்க வேண்டும். சில அதிகாரிகளின் தன்னிச்சையாக  செயற்படுகின்றனர். அவர்கள் அந்த அதிகாரத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும். இந்த விடயங்களின் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பவங்களை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே  இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18
news-image

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-16 14:15:55
news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57