சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

Published By: Digital Desk 7

23 Jan, 2025 | 04:57 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு மீன் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும், குறிப்பாக மீன்பிடித் துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. மேலும் இதன் போது பாகிஸ்தான் பிரதமரின் அன்பளிப்பாக ஒரு சிறப்புப் பரிசு உயர்ஸ்தானிகரால் அமைச்சருக்கு வழங்கப்பட்டது.

இது நல்லெண்ணத்தையும் நட்புறவையும் வெளிப்படுத்தும் அடையாளமாக அமைந்தது. மீன்பிடித் துறையில் கூட்டாண்மை முயற்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை அவர் வலியுறுத்தினார். மேலும், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் முழுமையான பயனை இலங்கை பெற்றுக்கௌ;ளாதது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. திலாப்பியா மீன்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை என்பதை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

திலாப்பியா மீன்களுக்கான கேள்வி பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகவும், அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வர்த்தக உறவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிரித் தொழில்நுட்பத் துறையில் பாகிஸ்தானின் மேம்பட்ட நிபுணத்துவம் மற்றும் மீன்பிடித் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு இணைப்பாளர் மஹ்வாஷ் சாமி மற்றும் இரண்டாம் செயலாளர் இப்திகார் ஹூசைன் அமைச்சின் பிரத்தியேக செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிக்கோயா சந்தியில் பஸ் - முச்சக்கரவண்டி...

2025-02-09 10:58:35
news-image

கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு,...

2025-02-09 10:35:23
news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16