(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு பல மாதங்களாக கத்திருக்க வேண்டிய பிரச்சினைக்கு தீர்வுகண முடியாத நிலையில், தற்போது நிகழ்நிலை கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ளவும் மக்கள் 3 அல்லது 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகண அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) நிலையியற் கட்டளை 27/2 கீழ் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தர்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் கடந்த நவம்பர் 4 ஆம் திகதி முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு நிர்ணயித்திருந்தாலும், தற்போதும் கூட கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ள மக்கள் 3 அல்லது 4 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடி வரும் ஏராளமானோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கீழாகவும் விண்ணப்பதாரர் ஒருவர் கடவுச்சீட்டைச் பெற எடுக்கும் நேரம், தினசரி வழங்கப்படும் மற்றும் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுக்களில் சராசரி எண்ணிக்கை, அதேநேரம் இந்த கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தடங்களை ஏற்படுத்தியுள்ள காரணங்கள், இயல்புநிலைக்கு திரும்ப எதிர்பார்க்கப்படும் காலம் என்னவென அரசு பதிலளிக்க வேண்டும்.
மேலும், ஜனவரி 2024 முதல் இன்று வரை கடவுச்சீட்டுக்களைப்பெற பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இதுவரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை, வழங்க வேண்டியுள்ள எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் இருக்கும் எண்ணிக்கை, தற்போது கடவுச்சீட்டுகளை வழங்கும் சேவை வழங்குநர் யார்? விலைமனு கோரல் தொடர்பான தகவல்களை சபையில் சமர்ப்பிக்க வேண்டும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவது முக்கியம் என்ற படியால், இவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் அதனால் இதுதொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து உடனடியாக பதில் வழங்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM