இன்றைய சூழலில் எம்மில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அத்தான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதலான வெற்றியும், சிலருக்கு எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றியும், சிலருக்கு எதிர்பார்த்த குறைந்தபட்ச வெற்றி கூட கிடைக்காமல் தோல்வியும் கிடைத்து வருகிறது.
இதற்கு ஒவ்வொருவருக்கும் நவகிரகங்களின் அருள் பார்வை வெவ்வேறு அளவுகளில் கிடைப்பதுதான் காரணம். இந்தத் தருணத்தில் நவக்கிரகங்களின் அருளை பரிபூரணமாய் பெறுவதற்கான சூட்சம மந்திரங்களை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்த இருக்கிறார்கள்.
நீங்கள் பன்னிரண்டு ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் தான் பிறந்திருப்பீர்கள். உங்களுடைய ராசிக்குரிய பிரத்யேக மந்திரத்தை நாளாந்தம் காலை 6:00 மணி முதல் 7 மணிக்குள் நீராடி விட்டு பூஜை அறையில் இறைவனை தியானித்து வெற்றியை தொடர்ச்சியாக பெற வேண்டும் என பிரார்த்தித்து பிரத்யேக மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
மிதுனம்- துலாம் -கும்பம்- ஆகிய மூன்று ராசியினர் மட்டும் உங்களுடைய ஜாதகத்தில் சந்திரன் வளர்பிறையாக இருந்தால் இந்த மந்திரத்தை மனதில் உச்சரிக்காமல் வாய்விட்டு உரத்து உச்சரிக்க வேண்டும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் மனதில் உச்சரிக்க வேண்டும்.
இதனால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம். ஏனைய ராசியினரும் தங்கள் ராசிக்குரிய மந்திரத்தை வாய்விட்டு உரக்க உச்சரிக்கும் போது தான் அதனுடைய அதிர்வலை பிரபஞ்சத்தில் பரவி உங்களுடைய கோரிக்கை நிறைவேறும். இத்தகைய மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
ஒவ்வொரு ராசிக்குரிய மந்திரங்கள்...
மேஷம் - ஓம் நமச்சிவாய !
ரிஷபம் - ஓம் நமோ நாராயணாய நமஹ!
மிதுனம் - ஓம் கம் கணபதயே நமஹ!
கடகம்- ஓம் சந்திர பகவானே நமோ நமஹ !
சிம்மம் - ஓம் பைரவாய நமோ நமஹ !
கன்னி - ஓம் சரவணபவ !
துலாம் - ஓ மகாலட்சுமியே நமோ நமஹ!
விருச்சிகம் - ஓம் முருகா போற்றி! போற்றி!
தனுசு - ஓம் ஆஞ்சநேயா நமோ நமஹ!
மகரம் - ஓம் சனி பகவானே போற்றி !
கும்பம் - ஓம் மகா புருஷாய வித்மஹே!
மீனம் - ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM