அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பயிரிடப்படாத நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்துவது கட்டாயம் - அமைச்சர் கே. டி லால்காந்த

Published By: Digital Desk 7

23 Jan, 2025 | 06:54 PM
image

அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலங்களை விவசாயத்திற்கு  பயன்படுத்துவது கட்டாயம் என்றும், அதை கடைப்பிடிக்காத காணி மற்றும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே. டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு பின்னர் உரிய வேலைத்திட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படும் எனவும், பயிரிடப்படாத காணிகளை அரசு ஒருபோதும் கையகப்படுத்தாது எனவும் அமைச்சர் வலியுறுத்தி கூறியுள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு இது தொடர்பான விடயத்தில் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் தீவிரமாக தலையிடும்.

தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை நாட்டை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நிலத்தை உற்பத்தி செய்யாத அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும்  கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49