மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்களையும் உள்ளீர்க்க வேண்டும் - உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் ஆளுநர், அதிகாரிகள் கோரிக்கை 

22 Jan, 2025 | 08:19 PM
image

(எம்.நியூட்டன்)

வட மாகாண திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக உள்ளீர்க்க வேண்டும் என உலக வங்கி பிரதிநிதிகளிடம் ஆளுநர், அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைப்பாடுகள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் தலைமையிலான வடக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் நகர அபிவிருத்திக்கான மூத்த விசேட அதிகாரி போஹரம் ஷா தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டனர். 

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர், உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர். 

இதேவேளை வடக்கு மாகாண பிரதம செயலர் தலைமையிலான அதிகாரிகள் துறைசார் திட்ட முன்மொழிவுகளை உலக வங்கிப் பிரதிநிதிகளிடம் முன்வைத்தனர். 

வடக்கின் பிரதான வீதிகள், பாலங்கள், எரியூட்டிகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பிலும் அவற்றை விரைவாக முன்னெடுப்பதன் தேவைப்பாடு தொடர்பாகவும் எடுத்துரைத்துள்ளனர். 

மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மாகாண சபையின் அமைச்சுக்கள், திணைக்களங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களாக உள்ளீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-02-09 11:09:50
news-image

டிக்கோயா சந்தியில் பஸ் - முச்சக்கரவண்டி...

2025-02-09 10:58:35
news-image

கிண்ணியாவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடு,...

2025-02-09 10:35:23
news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12