இலங்கையின் ஆடைத் தொழிலில் துறையில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் ஏனைய பணியாளர்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையாகவே இந்த திட்டம் உள்ளது. "Inclusive Threads" என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொது மற்றும் தனியார் துறைகளின் திறனை வெளிப்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து, ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் ஆதரவுடன், Better Work Sri Lanka வழிநடத்துகிறது. இந்த கூட்டு முயற்சியானது Better Work இலங்கையின் பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான உறுதிப்பாட்டை உருவாக்குகிறது.இது தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்தவும், முதலாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு நடைமுறை திறன்களை மேம்படுத்தவும், தொழில்துறை முழுவதும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் கூறுகையில், செழிப்பான ஆடைத் துறையில் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை அத்தியாவசிய காரணிகளாகக் காணலாம் என தெரிவித்தார். Inclusive Threads திட்டத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை தொழில்துறைக்கு பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது, அதே நேரத்தில் அந்தத் துறைக்குள் உள்ள சிரமங்களைக் குறைக்கிறது. எங்களுக்கு முன்மாதிரியான தலைமையை வழங்கும் திறன் உள்ளது, அதன் மூலம், சிறந்த நெறிமுறைகள் மற்றும் திறன்களைக் கொண்ட உண்மையிலேயே சமமான பணியிடத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்கு சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்னவும் ஆதரவு அளித்தார், அவர் பொது-தனியார் கூட்டாண்மைகளின் முக்கிய பங்கு குறித்து கூறுகையில்: "மாற்றுத்திறனாளிகளின் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சமமான வேலைச் சந்தையை உருவாக்குவதற்கும் தனியார் துறையின் தீவிர பங்களிப்பு அவசியம்" என்று கூறினார்.
இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் ஜோனி சிம்சன், நம் அனைவரின் கூட்டு முயற்சிகள் மூலம், அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கி, தொழிலாளர் சந்தையில் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்க முடியும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பணிப்பாளர்நாயகம் வஜிர எல்லெபொல, மாற்றுத்திறனாளிகளின் திறன்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது சமத்துவத்தை நோக்கிய ஒரு படியாக மட்டுமல்லாமல், புத்தாக்கத்துக்கான வாய்ப்பாகவும், பன்முகத்தன்மையின் மதிப்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு பணியாளர்களை உருவாக்குவதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM