அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம் : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 08:22 PM
image

(நா.தனுஜா)

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அபிவிருத்தி செயற்திட்டத்துடன் தொடர்புடைய சகல விடயங்களும் எதிர்வரும் ஒருமாதகாலத்தினுள் தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இச்செயற்திட்டத்தினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உத்தரவாமளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று புதன்கிழமை (22) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இருதரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் குறித்துக் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித்த ஹேரத், குறிப்பாக அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணம் தொடர்பில் இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இச்செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 3.7 பில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்வது குறித்து சீன பெற்றோலியம் மற்றும் இரசாயனக் கூட்டுத்தாபனத்துடன் (சினோபெக்) ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் நிலையில், இச்செயற்திட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகள், வழிகாட்டல்கள், ஏனைய வசதிகள், இத்திட்டத்தின் மூலம் இலங்கையினால் விநியோகிக்கப்படக்கூடிய எரிபொருளின் அளவு உள்ளிட்ட விடயங்கள் குறித்து எதிர்வரும் ஒரு மாதகாலத்துக்குள் தீர்மானிப்பதற்கு ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இணக்கம் காணப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அத்தோடு இந்த அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஊடாக மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, அது அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என விளக்கமளித்த அவர், இவ்வாறான செயற்திட்டங்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் இச்செயற்திட்டம் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் அவசியமான சகல மட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளடக்கப்படும் என்பதனால், இதனால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என உத்தரவாதமளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது...

2025-02-09 09:57:02
news-image

சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான சட்டமா அதிபரின் தீர்மானம்...

2025-02-09 09:35:48
news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 10:07:00
news-image

14 இந்திய மீனவர்கள் கைது

2025-02-09 09:35:46
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28