திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிப்பு

Published By: Digital Desk 7

22 Jan, 2025 | 05:23 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலையில் நிலவும் சீரற்ற வானிலையால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் பாதிக்கப்பட்டு உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் வெருகல் ஆற்று நீரின் மட்டம் அதிகரித்து நாதனோடை அணைக்கட்டை மேவி பாய்வதன் காரணமாக வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மாவடிச்சேனை பகுதியில் வெள்ளநீரானது வீதியை ஊடறுத்துச் செல்வதனால் அதனூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெருகல் முத்துச்சேனை பிரதான வீதியினூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக வெள்ள நீரின் மட்டம் உயர்வடைந்து வருவதுடன் வெருகல் ஆலயத்தினுள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உணவுத்தேவையானது புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் புளுழு அமைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கான உலர்உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேடுவர் சமூகத்தை தவறாக சித்தரித்த யூடியூப்...

2025-03-18 15:57:57
news-image

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள்...

2025-03-18 15:35:08
news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:30:43
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13