மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை (22) காலை 7 மணி வரையில் 31 அடி 8 அங்குலமாக உயர்ந்திருந்தது. இதனால் அக்குளத்தின் 4 வான்கதவுகள் 5 அங்குலம் உயரத்துக்கு இன்று திறந்துவிடப்பட்டதாக உன்னிச்சை குளத்தின் திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்தார்.
இதனால் செக்கனுக்கு 3425 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் குளத்தை அண்மித்த தாழ் நிலங்கள் பாரியளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,
இதனால் உன்னிச்சை குளத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்தின் நீர்மட்டம் 30 அடி 9 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16 அடி 10 அங்குலம், வாகனேரி குளத்தின் நீர்மட்டம் 19 அடி 7அங்குலம், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி 8 அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15 அடி 5 அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி அளவுகளுக்கு உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM