பேஸ்புக் கணக்கிற்குள் ஊடுருவி வங்கி கணக்கிலிருந்து மோசடியான முறையில் பணம் பெற்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் பேஸ்புக் கணக்கு ஒன்றிற்குள் ஊடுருவி வங்கி கணக்கிலிருந்து சுமார் மூன்று தடவைகள் மோசடியான முறையில் 07 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கத்தார் நாட்டில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM