குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில் மீள ஆரம்பம் - 10.5 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு! 

22 Jan, 2025 | 04:31 PM
image

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட சுமார் ஒரு இலட்சம் மக்கள் போக்குவரத்து மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித்தொகை ஒதுக்கப்படவுள்ளது.

பேராதனை மற்றும் பதுளை, செங்கலடி வீதியின் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகையில் எஞ்சிய பணத்தொகையை  இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கப்படுவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தம், நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் (சட்ட) அப்துல் மொசன் ஏ. அல்முல்லா ஆகியோருக்கு இடையில்  கைச்சாத்திடப்பட்டது. 

இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் பதுளை,  செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டத்தில் எஞ்சிய பணம் வீதி வலையமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு மாற்றப்பட்டு, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்த பாலம் நிர்மாணிக்கப்படுவதால் அவ்வீதியூடான போக்குவரத்து பிரச்சினைகள்  முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20