மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஐஸ், கேரள கஞ்சா மற்றும் கசிப்பு போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது 7 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைதான நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 750 மில்லி லீற்றர் கசிப்பு என்பவற்றுடன் திருப்பெருந்துறையைச் சேர்ந்த நால்வரும் கேரள கஞ்சாவுடன் மாமாங்கம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM