சிங்கக் குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு! 

22 Jan, 2025 | 02:58 PM
image

அம்பாந்தோட்டை - ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்து மூன்று மாதங்களேயான 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பூங்காவின் இயக்குநர் பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். 

அதன்படி, இப்பூங்காவில் வளரும் ஐந்து பெண் சிங்கக் குட்டிகளுக்கும் ஓர் ஆண் சிங்கக் குட்டிக்கும் பொதுமக்கள் சூட்ட விரும்பும் பெயர்களை அஞ்சல் அட்டையில் எழுதி, அதனுடன் தொலைப்பேசி எண்ணையும் இணைத்து ரிதியகம சபாரி பூங்காவின் முகவரிக்கு அனுப்புமாறு அதன் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

ரிதியகம  சபாரி பூங்காவில் உள்ள லாரா, டோரா ஆகிய இரு பெண் சிங்கங்களுக்கும் பிறந்த இந்த ஆறு குட்டிகளும் தற்போது மூன்று மாத வயதுடையவையாக உள்ளன.

டோரா மூன்று பெண் சிங்கக் குட்டிகளையும் லாரா இரண்டு பெண் சிங்கக் குட்டிகள் மற்றும் ஓர் ஆண் சிங்கக் குட்டியையும் ஈன்றுள்ளன. இந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் சூட்ட தற்போது தீர்மானித்துள்ளோம்.

அடுத்த மாதம் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இந்த சிங்கக் குட்டிகள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அத்துடன் இந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்கும் அரிய வாய்ப்பும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16
news-image

நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை...

2025-02-14 11:35:50