இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு

22 Jan, 2025 | 12:58 PM
image

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரது நியமனத்துடன் இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கத்தின் பதவிக் காலம் நேற்று செவ்வாய்க்கிழமை (22)   ஜனவரி 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், துணைவேந்தரின் கடமைகளை ஆற்றுவதற்கு பதில் பிரதித் துணைவேந்தர் கலாநிதி தம்பிராஜா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் கடந்த வருடம் ஒக்ரோபர் 15 ஆம் திகதி புள்ளிகளை வழங்கினர். 

அவற்றின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் முதல் நிலையிலும், சுகநல விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன், விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வது வழமையாக இருந்து வந்தது.

எனினும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகா பதவிக்கு வந்த பின்னர், ஜனாதிபதியினால் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே பதில் துணைவேந்தர்களை நியமித்துள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்   ஜீ.ஏ.எஸ். ஹினிகதரவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.ரமீஸின் பதவிக்காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் கலாநிதி ஜானக புஸ்பகுமார பதில் துணைவேந்தராகக் கடமையாற்றி வருகிறார்.

ருஹுண பல்கலைக்கழகத்தில் இயல்புநிலை பாதிப்புக்குள்ளாகியதை அடுத்து, பல்கலைக்கழகச் சட்டத்தின் படி கல்வி அமைச்சருக்குள்ள தத்துவத்தின் அடிப்படையில், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவின் பதவி வறிதாக்கப்பட்டு அவரது கடமைகளை ஆற்றுவதற்கெனத் தகுதி வாய்ந்த அதிகாரியாக ஆர்.எம்.யூ.எஸ்.கே.ரத்நாயக்க பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி தம்பிராஜா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்துடன், இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

இதே நேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதனின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் நியமனம் குறித்தும் ஜனாதிபதி செயலகத்தினால் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பில் இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவது குறித்து அரச உயர்மட்டத்தில் ஆராயப்படுவதனாலேயே இந்த இழுபறி நிலை காணப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-02-12 10:12:15
news-image

வவுனியாவில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர்...

2025-02-12 10:15:09
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08