இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பொங்கல் விழாவில் பிரிட்டிஸ் பிரதமர்

Published By: Rajeeban

23 Jan, 2025 | 03:43 PM
image

இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது  என தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர் தெரிவித்துள்ளார்.

டவுனிங்ஸ்ரீட்டில்உள்ள பிரதமர்அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

உங்கள் அனைவரையும் இந்த அறையில் பார்க்க முடிவதும்,டவுனிங் வீதியில் பார்க்க முடிவதும் சிறந்த விடயம்.ஆம் இது அரசாங்கத்தின் இதயம்.ஆனால் நீங்கள் இங்கேயே இருக்கவேண்டும்.வெறுமனே விருந்தாளிகளாக மாத்திரம் இல்லை, நாங்கள் அரசாங்கமாக செய்வதின் மீது உங்கள்முத்திரைகளை பதிக்கவேண்டும்.

இந்த இடத்தை நான் எனது வீடாக கருதுவது போல உங்கள் இல்லமாக நீங்கள் கருதவேண்டும்.

எங்கள் தேசத்திற்கு தமிழ் சமூகம் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது .

எங்கள் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.அது ஒரு சிறந்த தருணம் -ஜூலையில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு,ஏற்கனவே உங்கள் தொகுதியை உங்கள் நாட்டை உங்கள் பிரதிநிதித்துவம் செய்து மிகச்சிறப்பாக செயற்படுகின்றார்.

வெஸ்ட்மினிஸ்டரின் மதில்களிற்கு அப்பால் பார்க்கின்றபோது, எங்கள தேசிய சுகாதார சேவையில் ,பாடசாலைகளில்,வர்த்தகங்களில் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பலர் இங்குள்ளனர்.

ஆகவே நன்றி, இந்த நாட்டிற்கு நீங்கள் செய்யும் பங்களிப்பிற்கு நன்றி,தைப்பொங்கலை நாங்கள் கொண்டாடும் இந்த தருணத்தில் டவுனிங்வீதியில்  எங்களுடன் இணைந்துகொண்டமைக்காக நன்றி.

வரும்வழியில் நீங்கள் பார்த்திருக்கும் கோலம் இந்த கட்டிடத்தில் நீங்கள் வரவேற்கப்படுவதற்கான சின்னம் என நினைக்கின்றேன்.

இந்த அறையில் உள்ள சிலருக்கு வரலாறு என்பது துயரம் வேதனையுடன் தொடர்புபட்டதாக உள்ளது என்பது எனக்கு தெரியும்.

ஆகவே நீங்கள் வெறுமனே வரவேற்கப்படவில்லை நீங்கள் இந்த இந்த தேசத்தின் மிக முக்கியமான ஒரு பகுதி பிரிட்டனை உங்கள் தேசம் வீடு என நீங்கள் அனைப்பது குறித்து நாங்கள் பெருமிதமடைகின்றோம்.

இது சேவைசெய்யும் அரசாங்கமாக விளங்கும் என நான் வாக்குறுதியளித்திருந்தேன்.தேர்தலிற்கு மறுநாள் டவுனிங்வீதி பத்தாம் இலக்கத்திற்கு வெளியே நின்றபடி இது மக்களிற்கு சேவையாற்றும் அரசாங்கமாக திகழும் என நான் தெரிவித்திருந்தேன்.

அந்த சேவை உணர்வு பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் குருதியில் ஓடுகின்றது.

பொங்கல் பானையை போலவே தமிழ் சமூகத்தின் செழிமையும் பெருந்தன்மையும் நிரம்பிவழிகின்றது,நாடு முழுவதும் ஒளிளையும் நம்பிக்கையையும் கொண்டுவருகின்றது.இலங்கையில் சமத்துவம் உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14