நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது - அமைச்சர் கே.டி.லால்காந்த

22 Jan, 2025 | 10:57 AM
image

சின்னாபின்னமாகிப்போன நாட்டு நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப  நாம் விரும்பியோ விரும்பாமலோ சில தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளது என்று விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். 

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்த அமைச்சர்,  மேலும் கூறுகையில்,

தோல்வியின் எல்லையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவது தேசிய மக்கள் சக்திக்கு ஒரு சவாலாகாது. பூச்சியத்துடன் மேலும் ஒரு பூச்சியம் சேர்ந்தால் அதுவும் பூச்சியம்தான். எனவே, தோல்வி அடைந்தவர்கள் பலர் ஒன்றிணைந்தாலும் இல்லாவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான்.

நீதிமன்ற உத்தரவொன்று இருப்பதன் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் காலதாமதமின்றி நடத்தப்படும். மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் ஆரம்பத்தில் நடக்கவிருக்கும் மேற்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் எமக்கு இலகுவான வெற்றியைத் தரும். இதுவரை அரசு மேற்கொண்டு வரும் செயற்றிட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் ஒன்றிணைவது நல்லது. ஏனென்றால், அவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் தோல்வியடைந்த பிறகு அவர்களுக்கு கூறுவதற்கு எந்தக் காரணமும் இருக்காது. தாம் பிரிந்து போட்டியிட்டதால்தான் தோல்வியடைந்தோம்  என்ற போலிக் காரணம் இத்துடன் முடிந்துவிடும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை மையமாக வைத்து எமக்கு மேற்கொள்ளவேண்டிய எந்த பணியும் கிடையாது. ஏனென்றால், நாம் தற்போது மேற்கொள்ளும் பணிகளுக்கு பொதுமக்கள்  ஆதரவளித்து வருகின்றனர். எனவே, புதிதாக எதையும் மேற்கொள்ளவேண்டிய தேவை இல்லை.  அரிசிப் பிரச்சினை பற்றி பிரசாரம் செய்யுமளவுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. கண்டி மாவட்டத்தில் அரிசி தொடர்பாக எதுவித பிரச்சினையோ முறைப்பாடோ  இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

சின்னாபின்னமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு விரும்பியோ விரும்பாமலோ நாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிவரும். சில உற்பத்திகளுக்கான வரிகள் அதிகரிக்கக் காரணமும் அதுவேயாகும். நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்து அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32
news-image

தமிழர் தாயகத்தின் அடையாளங்களை சிதைப்பது தடுக்கப்பட...

2025-02-16 13:54:14
news-image

பண்டாரகமவில் கார் விபத்து ; இளைஞர்...

2025-02-16 13:00:13
news-image

தெரணியகல பகுதியில் கோடாவுடன் சந்தேகநபரொருவர் கைது...

2025-02-16 12:28:20
news-image

செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு...

2025-02-16 12:26:57
news-image

நாட்டில் 16 இலட்சம் அங்கவீனர்கள் காணப்படுகின்றனர்...

2025-02-16 12:26:15
news-image

நாளை தேசிய மக்கள் சக்தியின் வரவு...

2025-02-16 11:43:58
news-image

பொத்துப்பிட்டிய பகுதியில் பொல்லால் தாக்கி ஒருவர்...

2025-02-16 12:25:19
news-image

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை...

2025-02-16 11:27:20