ஹுரிகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதர்சனாகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுரிகஸ்வெவ - சுதர்சனாகம பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் இருந்த பலா மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, பலா மரத்தின் கிளை அருகிலுள்ள மின் கம்பியில் மோதியதில், சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனை பலா மரத்தின் கிளைகளை வெட்டுமாறு பணிக்கப்பட்ட அயல் வீட்டில் வசிக்கும் 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM