அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை கண்டிக்கும் திஸ்ஸ விதாரண 

Published By: Priyatharshan

29 May, 2017 | 05:19 PM
image

(எம்.ஆா்.எம்.வஸீம்)

அனர்த்தம் ஏற்படப்போவதை அறிந்தும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அனர்த்தங்கள் ஏற்படும்போது அதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்துக்கொள்ளும் பொருட்டே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தில் நான் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சராக இருக்கும்போதே இது அமைக்கப்பட்டது.

ஆனால் நாட்டில் தற்போது இடம்பெற்றிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அனர்த்த முகாமைத்துவ  நிலையம் அதுதொடர்பாக கவனயீனமாகவே இருந்துள்ளது.

 மேலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு சா்தியம் இருக்கின்றது. அதனால் வெள்ளம் வடிந்தோடும் பிரதேசங்களில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு சுகாதார அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் தேவையான வைத்தியர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கவும் சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37